விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
நடிகை ராதா தன்னை திருவல்லிக்கேனியை சேர்ந்த பைசூல் என்பவர் தாலி கட்டாத மனைவியாக வைத்திருந்தாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி என்னிடம் இருந்து 50 லட்சத்தை பறித்து கொண்டார் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்மல்க புகார் கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி காவல் நிலையத்துக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்த வடபழனி போலீசார் ராதாவிடம் புகார் பெற்று பைசூல் மீது வழக்கு பதிந்தது. கோர்ட்டில் பைசூல் முன் ஜாமீன் மனுவை மூன்று முறை தாக்கல் செய்தார். மூன்றுமுறையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் பைசூலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. பைசூல் போலீஸில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார்.
போலீசார் பைசூலுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். அவரை கைது செய்ய தயங்குகிறார்கள், என்று ராதா கமிஷனரிடம் மீண்டும் புகார் அளித்தார். இந்த நிலையில் வடபழனி காவல் நிலையம் சென்று புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் ராதா. போலீசார் வழக்கை கோர்ட்டுக்கு சென்று வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டனர்.
இந்த நிலையில் ராதாவின் புகார் வாபஸ் தொடர்பாக போலீஸ் தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளது. பைசூலிடம் 50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ராதா புகாரை வாபஸ் பெற்றாரா? அல்லது பைசூலின் மிரட்டலுக்கு பயந்து வாபஸ் பெற்றாரா? அல்லது சினிமா வாய்ப்பு இல்லாத ராதா பரபரப்பு பப்ளிசிட்டிக்காக போலீசை பயன்படுத்திக் கொண்டாரா என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
"பைசூலிடம் பணம் பெற்றது ஊர்ஜிதமானால் போலீஸ் மற்றும் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தற்காக அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும். பணத்தை பறிமுதல் செய்து அதனை கோர்ட் மூலமே அவர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். பணம் கொடுத்திருந்தாலும் பைசூல் மீது நடவடிக்கை இருக்கும். பைசூலிடம் பணம் பறிக்கவே ராதா பொய் புகார் கூறியதாக ராதா மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்" என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.