7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |
தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி ஒரு ஈயை கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் நான் ஈ. இந்த படத்தில் நானி-சமந்தா ஜோடியாக நடிக்க, கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகனான ஈக்கும்- வில்லனுக்கும் நடைபெறும் கதை என்பதால், படம் முழுக்க சுதீப் டிராவலாகியிருந்தார். அதோடு, அவரது நடிப்பும் பேசும்படியாக இருந்ததால் அந்த ஒரே படத்தோடு தென்னிந்தியா முழுக்க பாப்புலர் நடிகராகி விட்டார் சுதீப்.
இருப்பினும் கன்னடத்தில் பல படங்கள் கைவசம் இருந்ததால் மீண்டும் தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பாகுபாலி என்ற சரித்திர படத்தை இயக்கி வரும் நான் ஈ இயக்குனர் ராஜமவுலி அப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க சுதீப்பை அழைத்துள்ளாராம். ஏற்கனவே இதே படத்தில் பிரபாஷ், அனுஷ்கா, ராணா, ரம்யாகிருஷ்ணன் என பல பிரபலங்கள் இருந்தபோதிலும், சுதீப் தனது பேவரிட் நடிகர் என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளாராம் ராஜமவுலி.
அதனால் ஏற்கனவே தான் நடித்து கால்சீட் கொடுத்திருந்த இரண்டு கம்பெனிகளிடம் பேசி, அந்த கால்சீட்டை பாகுபாலி படத்துக்கு கொடுத்து நடிக்கத்தயாராகி வருகிறாராம் சுதீப். ஆனால், சுதீப்பின் வருகை தங்களது கேரக்டரை பதம் பார்த்து விடுமோ என்று அப்படத்தில் நடித்து வரும் ஏனைய நடிகர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.