22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி ஒரு ஈயை கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் நான் ஈ. இந்த படத்தில் நானி-சமந்தா ஜோடியாக நடிக்க, கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். கதாநாயகனான ஈக்கும்- வில்லனுக்கும் நடைபெறும் கதை என்பதால், படம் முழுக்க சுதீப் டிராவலாகியிருந்தார். அதோடு, அவரது நடிப்பும் பேசும்படியாக இருந்ததால் அந்த ஒரே படத்தோடு தென்னிந்தியா முழுக்க பாப்புலர் நடிகராகி விட்டார் சுதீப்.
இருப்பினும் கன்னடத்தில் பல படங்கள் கைவசம் இருந்ததால் மீண்டும் தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பாகுபாலி என்ற சரித்திர படத்தை இயக்கி வரும் நான் ஈ இயக்குனர் ராஜமவுலி அப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க சுதீப்பை அழைத்துள்ளாராம். ஏற்கனவே இதே படத்தில் பிரபாஷ், அனுஷ்கா, ராணா, ரம்யாகிருஷ்ணன் என பல பிரபலங்கள் இருந்தபோதிலும், சுதீப் தனது பேவரிட் நடிகர் என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை அவருக்கு கொடுத்துள்ளாராம் ராஜமவுலி.
அதனால் ஏற்கனவே தான் நடித்து கால்சீட் கொடுத்திருந்த இரண்டு கம்பெனிகளிடம் பேசி, அந்த கால்சீட்டை பாகுபாலி படத்துக்கு கொடுத்து நடிக்கத்தயாராகி வருகிறாராம் சுதீப். ஆனால், சுதீப்பின் வருகை தங்களது கேரக்டரை பதம் பார்த்து விடுமோ என்று அப்படத்தில் நடித்து வரும் ஏனைய நடிகர்கள் கலக்கத்தில் உள்ளார்களாம்.