வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரணாசி'. இப்படம் 2027 ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பை முன்னிட்டு ஹாலிவுட் மீடியாக்களுக்கு மகேஷ், பிரியங்கா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் பேட்டிகளைக் கொடுத்துள்ளார்கள்.
அதில் ஒரு பேட்டியில் 'போக்கிரி' படம் தான் தன்னை ஸ்டார் ஆக்கியது என மகேஷ்பாபு தெரிவித்துள்ளார். “2006ல் வெளிவந்த 'போக்கிரி' படம் என்னை மாற்றியது. அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை எனக்குள் ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்க முடியாத ஒரு கட்டத்திற்குள் என்னை நுழைய வைத்தது. ஒவ்வொரு படமும் நமது 'மைண்ட் செட்'ஐ மாற்றிவிடும். இப்போது 'வாரணாசி' எனக்கு வேறு விதமான ஒரு பெரும் அனுபவத்தைக் கொடுத்து வருகிறது,” என்றார்.
பூரி ஜெகன்நாத் இயக்கிய 'போக்கிரி' திரைப்படத்தில் இலியானா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் தமிழில் பிரபுதேவா இயக்க விஜய், அசின், பிரகாஷ் ராஜ், நாசர் நடிக்க ரீமேக் ஆகி 2007ல் வெளிவந்தது. இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.
'போக்கிரி' இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் சேதுபதி, தபு, சம்யுக்தா நடிக்க 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தை இயக்கி வருகிறார்.




