சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
300 படங்களை தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் மம்முட்டி மலையாளத்தில் பிசியான நடிகர் கம் சூப்பர் ஸ்டார். இப்போது மகன் வேறு நடிக்க வந்துவிட்டார். அப்பா-மகன் படம்கூட போட்டி போட்டு ரிலீசாகிறது. இந்த பிசியான வாழ்க்கையிலும் மம்முட்டி விவசாயியாகவும் வாழ்கிறார். கோட்டையம் அருகே பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் நெல் விவசாயம் செய்கிறார். "நமக்கு தேவையான நெல்லை நாமே விவசாயம் செய்ய முடியும். மற்ற மாநிலங்களில் கையேந்தி நிற்க வேண்டியதில்லை" என்று சொல்லி வந்தார். இப்போது அவரே செயலிலும் இறங்கி விட்டார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவரே நேரடியாக பண்ணைக்குச் சென்று விவசாய வேலைகளில் இறங்கி விடுகிறார்.
தமிழ்நாட்டில் பிரகாஷ்ராஜ், மாமல்லபுரம் அருகே விவசாய பண்ணை வைத்திருக்கிறார். அங்கு அவர் அடிக்கடி சொல்வது மாதிரி இயற்கை விவசாயம் செய்கிறார்.
பிளாட்டுகளாவும், பில்டிங்குகளாகவும், குவிக்கும் ஹீரோக்கள், ஹீரோயின்கள், ஓட்டலும், திருமண மண்டமும் கட்டும் ஹீரோக்கள் இவர்களை பின்பற்றலாமே...!!