பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

பாலிவுட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த துரந்தர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படம் பத்தே நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூலித்து இந்த வருட இறுதியில் பாலிவுட் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே துரந்தர் போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது பயங்கரமான ஒன்றுதான். அது மட்டுமல்ல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக மூன்று மாதங்கள் நம்மை காத்திருக்க சொல்கிறார்கள். எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். முன்கூட்டியே இதன் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வெளியாகும் என்பது உறுதியாகிறது.