ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சென்னையில் தனியார் கல்லுாரியில் நடந்த மதராஸி பாடல் வெளியீட்டு விழாவில் மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் கலந்துகொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். அதேபோல் ஹீரோ சிவகார்த்திகேயனும் தனது குடும்பத்தை அழைத்து வந்து இருந்தார்.
விழாவில் முருகதாஸ் பேசுகையில் ''இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பு மிகவும் பெரியது, இதில் அனிருத்னு இன்னொரு ஹீரோனு சொல்லலாம். நான் சோர்வாக இருக்கும்போது விக்ரம் படத்தோட பின்னணி இசையை கேட்பேன். விஜய்யுடன் வேலை பார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும், அதே மாதிரிதான் அனிருத் தனித்தன்மையானவர். ஹீரோ தவிர ஹீரோயினாக நடித்த ருக்மிணி மற்றும் பிஜூ மேனன் கதைக்கு உயிர் கொடுத்திருக்காங்க. அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்த பிறகுதான் பிஜூ மேனனை ஒப்பந்தம் செய்தேன்.
12 உதவி இயக்குனர்கள் பங்கும் முக்கியானது, குறிப்பாக ஒளிப்பதிவாளர் உழைப்பு அபாரமானது. இலங்கையில் படப்பிடிப்பை நடத்தியபோது, பயங்கரமான புயல் வீசியது. அப்போது, ஒரு காட்சிக்காக உயரமான இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும்போது, அவரைவிட உயரமாக நின்றிருந்த ஒளிப்பதிவாளர், புயல் காற்றால் ட்ரோன் கேமரா யார் மீதும் மோதிவிடக் கூடாது என்று ஓடிப் போய் அதைப் பிடித்தார். அப்போது பிளேடு அவரது கையில் பட்டு விரல் தனியாக வந்துவிட்டது. நாங்கள் ஓடிப் போய் அவரது விரலைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தோம். விரலைச் சேர்த்த பிறகு, அடுத்த நாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். மதராஸி நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.