எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

சென்னையில் நேற்று நடந்த பேய்கதை பட விழாவில் சிறப்பு விருந்தினராக சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவர் சபேஷ் கலந்து கொண்டார். காரணம், படத்துக்கு இசையமைப்பது அவர் சகோதரர் முரளி மகன் போபோ சசி. பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் தான் சபேஷ்-முரளி.
அண்ணனுடன் சேர்ந்து இவர்கள் பல்வேறு படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர். தனியாக பொக்கிஷம், வைகை, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர்கள் இசையமைத்துள்ளனர். நேற்றைய விழாவில் 400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு இன்னமும் தேசியவிருது கிடைக்கலையே? உங்களுக்கு ஆதங்கம் இருக்கிறதா என கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதில் அளித்த சபேஷ், 'காதல் கோட்டை படத்துக்கே அவருக்கு தேசிய விருது கிடைத்து இருக்கணும். ஆனால், கிடைக்கவில்லை. அவரை பலரும் கானா பாடல்களை தந்தவர் என்ற ரீதியில் பார்க்கிறார்கள். அவர் மகன் ஸ்ரீகாந்த்தேவா கருவறை என்ற குறும்படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிவிட்டார். எங்கள் குடும்பத்துக்கு அது மகிழ்ச்சி '' என்றார்.
இந்த பேச்சு வைரலாகி வருகிறது. காதல் கோட்டை மட்டுமல்ல, ஆசை, குஷி, வாலி, அண்ணாமலை, பாட்ஷா, அவ்வை சண்முகி, நேருக்கு நேர், முகவரி என பல படங்கள் தேசிய விருதுக்கு தகுதியானவை. ஏனோ சில பாலிடிக்ஸ் காரணமாக அவருக்கு கிடைக்கவில்லை என்று அவர் தரப்பு சொல்கிறது.