கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மோகித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜுலை 18ம் தேதி வெளியான ஹிந்தித் திரைப்படம் 'சாயாரா'. இப்படம் தற்போது உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்த வசூலாக 376 கோடி, (நிகர வசூல் 308 கோடி), வெளிநாடுகளில் மொத்த வசூலாக 131 கோடி என மொத்தம் 507 கோடியை வசூலித்துள்ளது. இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு காதல் திரைப்படம் இந்த அளவிற்கு வசூலித்துள்ளது இதுவே முதல் முறை.
2025ல் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 'சாவா' ஹிந்திப் படம் சுமார் 800 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 507 கோடியுடன் 'சாயாரா' இரண்டாவது இடத்தில் உள்ளது.
500 கோடி வசூலைக் கடந்த இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூலைக் கடந்த படங்களில் தற்போது 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் பத்து மடங்கு அதிக வசூலைக் கொடுத்துள்ளது.