இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
2010 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்களில் கவனம் பெற்றவர்கள் இன்று முக்கிய நட்சத்திரங்களாக உள்ளனர். 2020 எனும் அடுத்த தசாப்தம் துவங்கி பலர் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் பட்டாளத்தில் தனக்கென தனித்துவ கதாபாத்திர தேர்வுகளுடன் வசீகரிக்கிறார் நடிகர் மாசாந்த் நடராஜன். முறைப்படி நடிப்பை கற்று 'கயமை கடக்க', 'நீல நிற சூரியன்' போன்ற திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற படங்களில் நடித்த இவர் கூறியதாவது....
சொந்த ஊர் மேட்டுப்பாளையம். சிறுவயதில் இருந்து திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். பள்ளி, கல்லுாரி நாடகங்களில் நடித்தேன்.
இன்ஜினியரிங் முடித்த கையோடு எனக்கு சினிமா கற்றுக் கொள்ள ஆசை என பெற்றோரிடம் கூறினேன். பிடித்ததை செய் என்றனர். சென்னை வந்து கூத்துப்பட்டறை சென்றேன். நடிப்பை கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் அங்கு சென்ற பின் தான் நடிப்பு என்பது கற்றுக் கொள்ள முடியாதது. பயிற்சிகள், முயற்சிகள் செய்தாலும், நடிப்பு என்பது உணர்வதில் தான் உள்ளது என புரிந்தது. கூத்துப்பட்டறை நடிப்பைக் கற்றுக் கொள்வதாக நினைக்காமல் ஆளுமையை வளர்க்கும் இடமாக இருந்தது.
அங்கு கற்ற பிறகு நானும் நிறைய தனிப்பட்ட முறையில் கற்றேன். 'ஸ்தனிஸ்லாவ்ஸ்கி மெத்தட்' நடிப்பு என பலவற்றையும் கற்றேன். கூத்துப்பட்டறை முடித்த பிறகு மீண்டும் கோயம்புத்துார் வந்து விட்டேன். என் கல்லுாரி சீனியர் சுந்தர் ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளர். ஒரு கதை உள்ளது என அழைத்தார். நான் நடித்தேன். படம் வெளியாகவில்லை.
மணிரத்னத்தின் உதவி இயக்குனர் கிரண் இயக்கத்தில் 'கயமை கடக்க' திரைப்படத்தில் நடித்தேன். நிறைய சர்வதேச விழாக்களில் பாராட்டை அள்ளியது. படத்தில் 5 பேர் தான் பணியாற்றினோம். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிக் கொள்ளும் இரு முகநுால் நண்பர்கள் நேரில் சந்திக்கும் போது என்ன நடக்கிறது, பேசுவதை பின்பற்றுகின்றனரா என்பது கதை. மெதுவாக செல்லும் த்ரில்லர் திரைக்கதை என பலர் பாராட்டினர்.
அடுத்ததாக சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் 'நீல நிற சூரியன்' படத்தில் நடித்தது வரப்பிரசாதம். கார்த்திக் எனும் பள்ளி சிறுவனாக ஆணும், பெண்ணும் இல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன். பள்ளி வயதில் ஏற்படும் உணர்வுகளின் போது ஏற்பட்ட தடுமாற்றம், உளவியல் சிக்கல்குறித்து நுணுக்கமாக நடிக்க முடிந்தது.
தொடர்ந்து மூன்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து விட்டேன். இனி கமர்ஷியல் ரொமென்டிக் காமெடி போன்ற படங்களில் நடிக்க வேண்டும். நாம் நடிக்கும் கதாபாத்திரங்கள், புது பிறப்பு எடுத்தது போன்ற அனுபவத்தை தரும். எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை. எல்லோருடைய 'நடிப்பு முறைகளையும்' தெரிந்து எனக்கென தனி பாணி உருவாக்க விரும்புகிறேன் என்றார்.