‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017ம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக படத்தொகுப்பு செய்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபலி… எண்ணற்ற நினைவுகள். முடிவில்லா உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான மைல்கல்லில் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரு பகுதிகளை ஒன்றாக இணைத்து அக்., 31ல் வெளியிடுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.