டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்கள் வெளியானது. இவர்கள் கூட்டணியில் வெளியாகும் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டாகிவிடும். தற்போது ராம் இயக்கியுள்ள 'பறந்து போ' படத்தில் யுவன் இசையமைக்கவில்லை. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இதுபற்றி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் கூறியதாவது, “ நானும் நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் தான். யுவன் ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு தினமும் கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருகிறது. முதலில் இந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. அதற்கான முன்பணமும் தந்தோம். திடீரென்று மதன் கார்க்கி, இப்படத்தில் அதிக பாடல்கள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்றார்.
அந்த நேரத்தில் திரைப்பட விழாவிற்கு வேறு படத்தை அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் வேறு சில படங்களில் யுவன் பிஸியாக இருந்தார். இதனால் மட்டுமே பாடல்களுக்கு அவரால் இசையமைக்க முடியாமல் போனது. அப்போது, பின்னணி இசையை நான் செய்துக் கொண்டிருக்கிறேன் என்று யுவன் கூறினார். இதனைத் தொடர்ந்து தான் சந்தோஷ் தயாநிதி இப்படத்துக்கு வந்து பாடல்களை இசையமைத்து தந்தார்” என ராம் கூறினார்.