சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கடந்த 2014ம் ஆண்டில் அறிமுக இயக்குனரான ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியான படம் 'தெகிடி'. இந்த படத்திற்கு பிறகு இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அவரும் ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு சென்றாக தகவல்கள் இருந்தது. ஆனாலும், தெகிடி படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரமேஷ், அசோக் செல்வன் கூட்டணி இணைகின்றனர். இது 'தெகிடி 2' அல்லது புது படமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த படத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக ரமேஷ் திரைக்கதை பணிகளைக் மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.