பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‛இருவர்' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‛ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன்' என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டு காணப்படுவதால் சோசியல் மீடியாவில் அவரை பலரும் உருவ கேலி செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கடந்த 2011ம் ஆண்டு எனது மகள் பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால் இதை வைத்து பலரும் பலதரப்பட்ட கேள்வி எழுப்புகிறார்கள். உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன்தான் இத்தனை அக்கறையோ தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் பீல் பண்ணியதில்லை. அதேபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதுமில்லை'' என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.