மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் படத்திற்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, அபிஷன் ஜீவிந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து படம் குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்து போயுள்ள அபிஷன் ஜீவிந்த் இதுகுறித்து கூறும்போது, “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்ததையும், டூரிஸ்ட் பேமிலி படத்தை அவர் எவ்வளவு விரும்பினார் என்று கூறியதையும் கேட்டபோது எனக்குள் ஏதோ ஒன்று நடந்தது. எனக்குள் இருக்கும் பையன் 100 முறை இதை பார்த்து விட்டான். இன்று பெருமிதத்தால் அழுகிறான்.. நன்றி சார்” என்று கூறியுள்ளார்.