ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் படத்திற்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, அபிஷன் ஜீவிந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து படம் குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்து போயுள்ள அபிஷன் ஜீவிந்த் இதுகுறித்து கூறும்போது, “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்ததையும், டூரிஸ்ட் பேமிலி படத்தை அவர் எவ்வளவு விரும்பினார் என்று கூறியதையும் கேட்டபோது எனக்குள் ஏதோ ஒன்று நடந்தது. எனக்குள் இருக்கும் பையன் 100 முறை இதை பார்த்து விட்டான். இன்று பெருமிதத்தால் அழுகிறான்.. நன்றி சார்” என்று கூறியுள்ளார்.