‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் படத்திற்கும் அபிஷன் ஜீவிந்துக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, அபிஷன் ஜீவிந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து படம் குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்து போயுள்ள அபிஷன் ஜீவிந்த் இதுகுறித்து கூறும்போது, “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.. சூர்யா சார் என் பெயரை சொல்லி அழைத்ததையும், டூரிஸ்ட் பேமிலி படத்தை அவர் எவ்வளவு விரும்பினார் என்று கூறியதையும் கேட்டபோது எனக்குள் ஏதோ ஒன்று நடந்தது. எனக்குள் இருக்கும் பையன் 100 முறை இதை பார்த்து விட்டான். இன்று பெருமிதத்தால் அழுகிறான்.. நன்றி சார்” என்று கூறியுள்ளார்.




