ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கோமாலி பிரசாத். நீனு சீதா தேவி, நெப்போலியன், ரவுடி பாய்ஸ் என பல படங்களில் நடித்தவர் ஹிட் : செகண்ட் கேஸ், தேர்ட் கேஸ் படங்களின் மூலம் புகழ்பெற்றார். தற்போது 'சசிவதனே' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோமாலி பிரசாத் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கனை. அதனால்தான் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "என்னுடைய ரிங் டோனே 'நானும் ரெளடிதான்' படத்தில் இருந்து 'நீயும் நானும்...' பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் படங்களில் பணிபுரிய ஆசை. அதேபோல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் பேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன். நான் நடிக்கும் தமிழ் படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் " என்றார்.