நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கோமாலி பிரசாத். நீனு சீதா தேவி, நெப்போலியன், ரவுடி பாய்ஸ் என பல படங்களில் நடித்தவர் ஹிட் : செகண்ட் கேஸ், தேர்ட் கேஸ் படங்களின் மூலம் புகழ்பெற்றார். தற்போது 'சசிவதனே' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோமாலி பிரசாத் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கனை. அதனால்தான் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "என்னுடைய ரிங் டோனே 'நானும் ரெளடிதான்' படத்தில் இருந்து 'நீயும் நானும்...' பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்போன்ஸ் புத்திரன், மணிகண்டன் படங்களில் பணிபுரிய ஆசை. அதேபோல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் பேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன். நான் நடிக்கும் தமிழ் படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும் " என்றார்.