அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
தமிழ் சினிமாவின் 1940களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்ற எம்.எஸ்.எஸ்.பாக்கியம். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சிவபாக்கியம் குடும்ப எதிர்ப்புகளை மீறி நாடகங்களில் நடித்து வந்தார்.
பின்னர், ஜூபிடர் பிலிம்ஸில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அவர் குறிப்பிடும்படியான பெரிய கேரக்டரில் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி, எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார்.
அதைத்தொடர்ந்து ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
நேற்றுடன் சிவபாக்கியத்தின் 99 வயது வரை நிறைவடைந்து அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரை போற்றுவோம் நினைவு கூறுவோம்.