நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா எம்ஜிஆருக்கு முன்னரே சினிமாவுக்கு வந்தவர். நாடகங்களில் வில்லனாக நடித்த அவர் திரைப்படங்களிலும் பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அவற்றில் முக்கியமானது 'சண்பகவல்லி'.
இது விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். இந்தப் படத்தை லங்கா சத்யம் இயக்கியிருந்தார் . பாலையா ஜோடியாக பெரியநாயகி நடித்தார். இவர்களுடன் கேகே பெருமாள், ராஜகோபால ஐயர், ஏழுமலை சீனிவாசன், எம் எஸ் விஜயா, விஜயவாடா ராஜாராம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
ஸ்ரீ கந்தர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் டி எஸ் பாலையா ரொமான்ஸ் மட்டும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார், என்றாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.




