மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா எம்ஜிஆருக்கு முன்னரே சினிமாவுக்கு வந்தவர். நாடகங்களில் வில்லனாக நடித்த அவர் திரைப்படங்களிலும் பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அவற்றில் முக்கியமானது 'சண்பகவல்லி'.
இது விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். இந்தப் படத்தை லங்கா சத்யம் இயக்கியிருந்தார் . பாலையா ஜோடியாக பெரியநாயகி நடித்தார். இவர்களுடன் கேகே பெருமாள், ராஜகோபால ஐயர், ஏழுமலை சீனிவாசன், எம் எஸ் விஜயா, விஜயவாடா ராஜாராம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
ஸ்ரீ கந்தர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் டி எஸ் பாலையா ரொமான்ஸ் மட்டும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார், என்றாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.