லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் தெலுங்கில் கூட வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. கடந்த வருடம் 'இந்தியன் 2', இந்த வருடம் 'கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து படுதோல்விகளைத் தழுவினார் ஷங்கர். அது தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதை எழுதியது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அதற்காக அவருக்கு சில கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் கூட தகவல் உண்டு. பொதுவாக கதைகளுக்கென லட்சங்களில்தான் சம்பளம் வழங்கப்படும்.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கி மே 1ம் தேதி வெளிவர உள்ள படம் 'ரெட்ரோ'. அதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றில் பேசுகையில் 'கேம் சேஞ்சர்' குறித்தும் பேசியுள்ளார்.
“கேம் சேஞ்ஜர்' படத்திற்காக நான் ஒன் லைனில் ஒரு கதை கொடுத்தேன். ஒரு நியாயமான ஐஎஎஸ் ஆபீசர், அரசியல்வாதியாக ஆவது பற்றிய கதை அது. ஷங்கர் சாரிடம் படத்தின் கதையைக் கொடுத்த பின், அது எப்படி பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என்ற ஆர்வத்தில் இருந்தேன். அப்படிப்பட்ட உலகம்தான் அவரைப் பற்றிய எனது பார்வை. ஆனால், 'கேம் சேஞ்ஜர்' பொறுத்தவரையில் வேறு உலகமாகிப் போனது.
நிறைய பேர், நிறைய எழுத்தாளர்கள். திரைக்கதை மொத்தமாக மாறிப் போனது. கதையும் கொஞ்சம் மாறியது. இருந்தாலும் ஒரு படத்தில் எது சிறப்பான பலனைத் தந்தது, ஒரு படம் எதனால் ரசிகர்களைக் கவர முடியாமல் போனது என்பதைச் சொல்லவே முடியாது,” என்று பேசியுள்ளார்.
இப்போது 'கேம் சேஞ்ஜர்' தோல்வி குறித்த தனது 'கதையை' மாற்றிப் பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ், 'கேம் சேஞ்ஜர்' படம் வெளி வந்த மறுநாளே, “கேம் சேஞ்ஜர்' படம் 'வின்டேஜ்' ஷங்கர் சாரின் பிரம்மாண்டமான அதிரடி காட்சிகள் மற்றும் அரசியல் பன்ச்களுடன் கூடிய ரசிகர்களுக்கான மிகவும் ரசிக்கத்தக்க படமாக இருந்தது. உங்கள் பெரிய தொலைநோக்குப் பார்வையில் என்னையும் ஒரு சிறிய பகுதியாக அனுமதித்ததற்கு நன்றி ஷங்கர் சார்,” என எக்ஸ் தளத்தில் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
அன்று ஷங்கரைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ், இன்று 'ஒன் லைன், நிறைய பேர், நிறைய எழுத்தாளர்கள், கதையே மாறியது” என இவரும் கதையை மாற்றிப் பேசுவது ரசிகர்கள் 'டிரோல்'களுக்கு ஆளாகியுள்ளது.