நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

நடிகர் சிவாஜி கணேசனின் அறிமுக திரைப்படமான “பராசக்தி'யின் நாயகியும், கன்னட நடிகர் ராஜ்குமாரின் அறிமுக திரைப்படமான “பேடர கண்ணப்பா” திரைப்படத்தின் நாயகியுமான நடிகை பண்டரிபாய் ஒரு தலைசிறந்த தென்னிந்திய திரை நட்சத்திரம். 1960 மற்றும் 70களில் தமிழில் வெளிவந்த முன்னணி நாயகர்களின் பெரும்பாலான திரைப்படங்களில் இடம் பெற்ற அன்பான 'அம்மா' கதாபாத்திரம் என்றால், அழைத்து வாருங்கள் பண்டரிபாயை என்ற நிலையே இருந்தது என்றால் அது மிகையன்று.
அந்த அளவிற்கு எம் ஜி ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிசந்திரன் என அன்றைய அனைத்து உச்ச நாயகர்களின் அம்மாவாகவே படங்களில் வாழ்ந்திருப்பார். “மன்னன்” திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான ஒரு திரைக் கலைஞராகவே அறியப்பட்டிருந்தார் நடிகை பண்டரிபாய்.
1949ம் ஆண்டு ஏவிஎம் தயாரித்த திரைப்படம் “வாழ்க்கை”. இரண்டு நாயகர்கள் இரண்டு நாயகிகள் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ஒரு நாயகனாக எஸ் வி சகஸ்ரநாமமும், மற்றொரு நாயகனாக டி ஆர் ராமச்சந்திரனும் நடித்திருக்க, எஸ் வி சகஸ்ரநாமத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை பண்டரிபாய். தமிழ் தெரியாத நடிகை பண்டரிபாய்க்கு 'ஆனா ஆவன்னா' சொல்லிக் கொடுத்து சலித்தே போயிருந்தார் அப்படத்தின் துணை நடிகரான பி டி சம்மந்தம்.
பின்னர் படத்தின் நாயகனான எஸ் வி சகஸ்ரநாமத்தையே பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுத் தர ஏற்பாடு செய்திருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். முழு முயற்சி எடுத்து இரண்டு மாதங்கள் தமிழ் கற்றுக் கொடுத்தும் நடிகை பண்டரிபாய்க்கு தமிழ் பேச வரவேயில்லை. நடிகை பண்டரிபாயை ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், அவரிடம் அம்மா, நீ அடுத்த படத்தில் நடிக்கலாம் என்று கூற, கொடுத்தால் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுங்கள் என அவர் மறுப்பு தெரிவிக்க, பின் ஒப்பந்தம் ரத்தானது.
அதன்பின் பண்டரிபாய் நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தில் எம் எஸ் திரவுபதி என்ற நடிகையை நடிக்க வைத்து படமாக்கி வெளியிட்டார் ஏ வி மெய்யப்ப செட்டியார். படத்தின் மற்றொரு நாயகியாக அன்று 16 வயதே நிரம்பியிருந்த நாட்டியத் தாரகையான நடிகை வைஜெயந்திமாலாவை இப்படத்தின் மூலம் நாயகியாக்கியிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். 1949ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது ஏ வி எம்மிற்கு.




