மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
கோபக்கார முனிவரான விஸ்வாமித்திரர் கதை பல திரைப்படங்களாக வந்துள்ளது. 1921ம் ஆண்டு காந்திலால் ரத்தோட் என்பவர் 'விஸ்வாமித்ரா மேனகா' என்ற மவுனப் படத்தை இயக்கினார். பிறகு 1952ம் ஆண்டு வங்க மொழியில் 'பானி பெர்மா' என்ற பெயரில் இதே கதை உருவானது. அதே ஆண்டு, பாபுராவ் பெயின்டர் என்பவரால் ஹிந்தியில் உருவாக்கப்பட்டது.
வி.சாந்தாராமும் இதே கதையை இரண்டு முறை படமாக்கி இருக்கிறார். தெலுங்கில் 'பிரம்மரிஷி விஸ்வாமித்ரா' என்ற பெயரில் உருவான படத்தில் என்.டி.ராமராவும் தமிழில், 'ராஜரிஷி' படத்தில் சிவாஜியும் விஸ்வாமித்ரராக நடித்திருக்கின்றனர்.
இவை அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். ஆனால் 1948ம் ஆண்டு தமிழில் உருவான 'பிரம்மரிஷி விஸ்வாமித்ரா' வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் விஸ்வாமித்ரராக நடித்தது கே.ஆர்.ராம்சிங். மேனகையாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ஜகன்னாத் இயக்கினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சரியான வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது படம் படு சீரியசாக இருப்பதாகவும், மக்கள் ரசிக்கும்படியான விஷயங்கள் படத்தில் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இதனால் தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்ட படப் பெட்டிகளை திரும்ப கொண்டு வந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் நடிப்பில் சில காமெடி காட்சிகளை அவசர அவசரமாக படமாக்கி அதனை படத்துடன் இணைத்து மீண்டும் தியேட்டருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு படம் வெற்றி பெற்றது.