அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது என சர்ச்சை எழுந்தது. அது குறித்து வருத்தம் தெரிவித்த மோகன்லால் அக்காட்சிகளை நீக்குவோம் என உறுதியளித்தார். அதன்பின் அக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்து நேற்று முதல் அது திரையிடப்பட்டது.
இதனிடையே, இப்படம் தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “தடைகளை உடைத்தெறிந்து 200 கோடியை வசூலித்து, 'எம்புரான்' வரலாறு படைத்துள்ளது,” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்துள்ளது. 200 கோடி வசூலைக் கடந்துள்ள இரண்டாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் 250 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.