நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் எதுவும் தேர்வாகவில்லை. ஆனால் லண்டனில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' என்ற படம் இறுதி சுற்றுக்கு தேர்வானது. இந்த படம் இங்கிலாந்து நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. தற்போது இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்தை இந்திய தணிக்கை வாரியம் படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்துள்ளது.
படத்தில் உள்ள கருத்துக்கள், காட்சிகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சில காட்சிகள், பல வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதி தரப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்து விட்டது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.