கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் எதுவும் தேர்வாகவில்லை. ஆனால் லண்டனில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' என்ற படம் இறுதி சுற்றுக்கு தேர்வானது. இந்த படம் இங்கிலாந்து நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. தற்போது இந்த படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்தை இந்திய தணிக்கை வாரியம் படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்துள்ளது.
படத்தில் உள்ள கருத்துக்கள், காட்சிகள் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சில காட்சிகள், பல வசனங்களை நீக்கினால் மட்டுமே வெளியிட அனுமதி தரப்படும் என்று தணிக்கை வாரியம் கூறியது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்து விட்டது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.