பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
சினிமாவில் காதலும், பிரிவும் சர்வ சாதாரணம். ஒரு காதல் பற்றி கேள்விப்பட்டால் அடுத்து ஏதோ ஒரு பிரிவு பற்றியும் செய்திகள் வரும். தற்போது வந்துள்ளது ஒரு காதல் செய்தி.
2020ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களாக தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கும் தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கும் காதல் என கிசுகிசு பரவி வருகிறது. தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ். 'உப்பெனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
ரித்து, வைஷ்ணவ் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றாலும் அவர்கள் வெளியில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள். அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது என்று தகவல்.