பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் இருந்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோரட்பூர் பகுதிகளில் நடந்தது. மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா சம்மந்தப்பட்ட சில காட்சிகள் , சண்டை காட்சியும், ஒரு பாடலின் சில பகுதியையும் படமாக்கியுள்ளனர். தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதற்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் விரைவில் துவங்கும் என்கிறார்கள்.
இதனிடையே படப்பிடிப்பு முடிந்த கையோடு அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்களையும் மகேஷ்பாபு, பிரியங்கா, ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அதுதொடர்பான போட்டோக்களும் வெளியாகின.