அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென். ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றும் 2.2 லட்சம் ரூபாய் பணமும் களவு போயுள்ளது. ஞாயிறு அதிகாலை 5 மணி அளவில் மூன்று மாடி கொண்ட அவரது வீட்டில் அவரது சகோதரி வான்மை தங்கியிருக்கும் மூன்றாவது மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் சத்தம் காட்டாமல் நகையையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து கண் விழித்த வான்மை வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதன் பிறகு நகையும் பணமும் களவு போய் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது விஸ்வக் சென்னின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வீட்டில் கிடைத்த கைரேகைகளையும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.