பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி | சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை? | இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென். ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றும் 2.2 லட்சம் ரூபாய் பணமும் களவு போயுள்ளது. ஞாயிறு அதிகாலை 5 மணி அளவில் மூன்று மாடி கொண்ட அவரது வீட்டில் அவரது சகோதரி வான்மை தங்கியிருக்கும் மூன்றாவது மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன் சத்தம் காட்டாமல் நகையையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
நீண்ட நேரம் கழித்து கண் விழித்த வான்மை வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதன் பிறகு நகையும் பணமும் களவு போய் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தற்போது விஸ்வக் சென்னின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வீட்டில் கிடைத்த கைரேகைகளையும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.