இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? |
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ராகினி திவேதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை ராகினி திவேதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு ரசிகர், ராகினி திவேதியின் கையை பிடித்து இழுத்தார்.
இதனால் கோபமடைந்த நடிகை ராகினி திவேதி உடனே அந்த ரசிகரை கடுமையான வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டியதோடு அவரது கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.