அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

அதிகமான சம்பளம் என்றால் அது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே கொடுப்பார்கள். கடந்த பல வருடங்களாகவே அதுதான் நடந்து வருகிறது. இப்போதும் கூட அதிகமான சம்பளத்தைப் பெறும் நடிகைகளாக அவர்கள்தான் இருந்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோனே 25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அவருக்கு அடுத்து கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோரும் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், திரிஷா, நயன்தாரா ஆகியோர் தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம். அவர்களுக்கு அடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.
திரிஷா, நயன்தாரா இருவரும் 40 வயதைக் கடந்துவிட்டார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற நடிகைகளில் ராஷ்மிகாவைத் தவிர அனைவருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். ராஷ்மிகாவும் 30ஐ நெருங்கி வருகிறார்.
20 பிளஸ் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமாகும் சிலரும் சில படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகிறார்கள்.