‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அதிகமான சம்பளம் என்றால் அது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே கொடுப்பார்கள். கடந்த பல வருடங்களாகவே அதுதான் நடந்து வருகிறது. இப்போதும் கூட அதிகமான சம்பளத்தைப் பெறும் நடிகைகளாக அவர்கள்தான் இருந்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோனே 25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அவருக்கு அடுத்து கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோரும் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், திரிஷா, நயன்தாரா ஆகியோர் தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம். அவர்களுக்கு அடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.
திரிஷா, நயன்தாரா இருவரும் 40 வயதைக் கடந்துவிட்டார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற நடிகைகளில் ராஷ்மிகாவைத் தவிர அனைவருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். ராஷ்மிகாவும் 30ஐ நெருங்கி வருகிறார்.
20 பிளஸ் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமாகும் சிலரும் சில படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகிறார்கள்.




