‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

அதிகமான சம்பளம் என்றால் அது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே கொடுப்பார்கள். கடந்த பல வருடங்களாகவே அதுதான் நடந்து வருகிறது. இப்போதும் கூட அதிகமான சம்பளத்தைப் பெறும் நடிகைகளாக அவர்கள்தான் இருந்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோனே 25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அவருக்கு அடுத்து கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோரும் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், திரிஷா, நயன்தாரா ஆகியோர் தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம். அவர்களுக்கு அடுத்து சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.
திரிஷா, நயன்தாரா இருவரும் 40 வயதைக் கடந்துவிட்டார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற நடிகைகளில் ராஷ்மிகாவைத் தவிர அனைவருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். ராஷ்மிகாவும் 30ஐ நெருங்கி வருகிறார்.
20 பிளஸ் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமாகும் சிலரும் சில படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகிறார்கள்.