வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குனராக மாறி நயன்தாராவை வைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மூக்குத்தி அம்மன்' என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது இருந்தே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆர் ஜே பாலாஜி தரப்பிலிருந்து அது குறித்து எந்த விதமான தகவலும் வெளியாகவே இல்லை.
இந்த நிலையில் தான் சமீபத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் பிரமாண்ட பூஜையுடன் துவங்கப்பட்டது. சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார். இதனால் ஆர்.ஜே. பாலாஜியிடம் இருந்து இந்த படம் கைநழுவி போனது ஏன் என்று பல விஷயங்கள் யூகங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து உள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
“மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியான பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு ஐடியாவும் இல்லை. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் இருந்தன. இப்போது என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர்.சியே இந்த படத்தை இயக்குகிறார் என்பது மிக சரியான விஷயம். இதை அவரிடமே நானும் கூறினேன்” என்று கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.




