'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', சிலம்பரசனின் 'எஸ்.டி.ஆர்.49' படங்களை தயாரித்து வருகிறவர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். அவர் இயக்கி உள்ள முதல் படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: 1995ல் இருந்து 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. தற்போதைய காலகட்ட கதைக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கான படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல இருக்கிறோம். இது வெறும் காதல் படம் இல்லை. நட்பு இருக்கிறது, சென்ட்டிமென்ட் இருக்கிறது. கதை கிராமத்தில் ஆரம்பித்து அமெரிக்கா வரை செல்கிறது.
கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் ஆகிய நான்கு பேருமே இந்த படத்தில்தான் அறிமுகமானார்கள். இப்போது இவர்கள் அனைவருமே பிசியான நடிகைகள் ஆகிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. கயாடு லோஹர் 'டிராகன்' படத்தின் மூலம் உயரத்திற்கு சென்று விட்டார். ப்ரீத்தி பல படங்களில் நடிக்கிறார். நிகாரிகா இன்ப்ளூயன்சர். நடிக்கக் கேட்டபோது, 'விருப்பமில்லை' என்று சொன்னார். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார், தெலுங்கிலும் நடிக்கிறார். என்றார்.




