மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', சிலம்பரசனின் 'எஸ்.டி.ஆர்.49' படங்களை தயாரித்து வருகிறவர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். அவர் இயக்கி உள்ள முதல் படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: 1995ல் இருந்து 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. தற்போதைய காலகட்ட கதைக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கான படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல இருக்கிறோம். இது வெறும் காதல் படம் இல்லை. நட்பு இருக்கிறது, சென்ட்டிமென்ட் இருக்கிறது. கதை கிராமத்தில் ஆரம்பித்து அமெரிக்கா வரை செல்கிறது.
கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் ஆகிய நான்கு பேருமே இந்த படத்தில்தான் அறிமுகமானார்கள். இப்போது இவர்கள் அனைவருமே பிசியான நடிகைகள் ஆகிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. கயாடு லோஹர் 'டிராகன்' படத்தின் மூலம் உயரத்திற்கு சென்று விட்டார். ப்ரீத்தி பல படங்களில் நடிக்கிறார். நிகாரிகா இன்ப்ளூயன்சர். நடிக்கக் கேட்டபோது, 'விருப்பமில்லை' என்று சொன்னார். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார், தெலுங்கிலும் நடிக்கிறார். என்றார்.