சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', சிலம்பரசனின் 'எஸ்.டி.ஆர்.49' படங்களை தயாரித்து வருகிறவர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். அவர் இயக்கி உள்ள முதல் படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: 1995ல் இருந்து 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. தற்போதைய காலகட்ட கதைக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கான படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல இருக்கிறோம். இது வெறும் காதல் படம் இல்லை. நட்பு இருக்கிறது, சென்ட்டிமென்ட் இருக்கிறது. கதை கிராமத்தில் ஆரம்பித்து அமெரிக்கா வரை செல்கிறது.
கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் ஆகிய நான்கு பேருமே இந்த படத்தில்தான் அறிமுகமானார்கள். இப்போது இவர்கள் அனைவருமே பிசியான நடிகைகள் ஆகிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. கயாடு லோஹர் 'டிராகன்' படத்தின் மூலம் உயரத்திற்கு சென்று விட்டார். ப்ரீத்தி பல படங்களில் நடிக்கிறார். நிகாரிகா இன்ப்ளூயன்சர். நடிக்கக் கேட்டபோது, 'விருப்பமில்லை' என்று சொன்னார். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார், தெலுங்கிலும் நடிக்கிறார். என்றார்.