பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சர்தார் படத்தை அடுத்து மீண்டும் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் -2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு முக்கிய சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. நேற்று அந்த காட்சியில் கார்த்தி நடித்தபோது எதிர்பாராத விதமாக அவரது காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துள்ளார்கள். கூடவே அவரது கால் வீங்கி விட்டதால் அவரை ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து கார்த்தி சென்னை திரும்பிவிட்டார். இதன் காரணமாக தற்போது சர்தார் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.