Advertisement

சிறப்புச்செய்திகள்

தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர்

22 பிப், 2025 - 01:11 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-MGR-gave-the-award-to-The-director

மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்ல படங்களை பார்ப்பதும் பாராட்டுவதும் வழக்கம். பாரதிராஜா, கே பாக்யராஜ், பாலுமகேந்திரா மகேந்திரன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவரது விருப்பமான இயக்குனர்களாக இருந்தார்கள். பல்வேறு காலகட்டங்களில் அவர்களை அழைத்து பாராட்டியுள்ளார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் ஒரு இயக்குனருக்கு தனியாக பாராட்டு விழா நடத்தி விருது வழங்கியது ஸ்ரீதர் ராஜன் என்ற இயக்குனருக்கு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜன் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தார். இதனால் இந்திய சினிமாவில் முன்னோடிகள் பலர் அவருக்கு அறிமுகம்.

தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் கூலி அதிகமாக கேட்டதற்காக எரித்துக் கொல்லப்பட்ட தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் இயக்குமாறு மேற்கு வங்காள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியார் ஸ்ரீதர் ராஜனை கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்பதால் தமிழிலேயே இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்த ஸ்ரீதர் ராஜன், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'குருதி புனல்' என்ற நாவலை மையமாக வைத்து 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் விஜயமோகன், ராஜேஷ், ரவீந்திரன், பூர்ணிமா, கல்கத்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்தார்கள். மேற்கு வங்க ஒளிப்பதிவாளர் சோமந்த் ராய் ஒளிப்பதிவுசெய்திருந்தார்.

இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்ற தமிழக அரசு விருது ஸ்ரீதர் ராஜனுக்கு கிடைத்தது. படத்தை பார்த்த எம்ஜிஆர் ஸ்ரீதர் ராஜனுக்கு என்று தனியாக பாராட்டு விழா நடத்தி அண்ணா விருது வழங்கினார்.

ஸ்ரீதர் ராஜன் அதன் பிறகு இரவு பூக்கள், பூக்கள் விடும் போது என்ற இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு படம் எதுவும் இயக்கவில்லை. இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மகள் ஜெயாவின் கணவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோபிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in