அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

“அம்புலி, மாயை, சதுரம் 2,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளவர் சனம் ஷெட்டி. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதால் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி திரையுலகினர் மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். “சமத்துவம் என்பது நான் பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதில்லை. சரிசமமான வாய்ப்புகள் எங்களைப் போன்ற நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அதுதான் சமத்துவம். ஹீரோக்கு கொடுக்கற சம்பளமும், ஹீரோயினுக்குக் கொடுக்கற சம்பளமும் சமமா இல்லை. ஹீரோவை அப்ரோச் பண்ற விதமும், ஹீரோயினை அப்ரோச் பண்ற விதமும் ஈக்குவலா இல்லை. எங்களை படம் நடிக்கக் கூப்புடறாங்களான்னு பார்த்தால், படுக்கத்தான் கூப்புடறாங்க, அப்படியிருக்கு அப்ரோச்,” என கடுமையாகப் பேசியுள்ளார்.




