ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் கனா. கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவர் எப்படி இந்திய அளவில் கிரிக்கெட் வீராங்கனை ஆக உயர்கிறார் என்கிற கதையைம்சத்துடன் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கிரிக்கெட் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான சஜீவன் சஜனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர், நடிகர் சிவகார்த்திகேயன் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தனக்கு உதவிய நிகழ்வு ஒன்றை தற்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு முறை மழை வெள்ளத்தால் நாங்கள் மிகப்பெரிய அளவில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு பேசியதுடன் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு நான், அண்ணா என்னிடம் இருந்த கிரிக்கெட் கிட முழுவதுமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனக்கு புதிதாக ஒன்று தேவைப்படுகிறது என கூறினேன். அடுத்த ஒரு வாரத்திற்குள் எனக்கு புதிதாக கிரிக்கெட் கிட் ஒன்றை சிவகார்த்திகேயன் அனுப்பி வைத்தார். இந்த சமயத்தில் தான், நான் சேலஞ்சர் டிராபியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. சிவகார்த்திகேயனின் இந்த உதவி அந்த சமயத்தில் எனக்கு ரொம்பவே பேருதவியாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.