சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் கனா. கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவர் எப்படி இந்திய அளவில் கிரிக்கெட் வீராங்கனை ஆக உயர்கிறார் என்கிற கதையைம்சத்துடன் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கிரிக்கெட் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான சஜீவன் சஜனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர், நடிகர் சிவகார்த்திகேயன் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தனக்கு உதவிய நிகழ்வு ஒன்றை தற்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு முறை மழை வெள்ளத்தால் நாங்கள் மிகப்பெரிய அளவில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு பேசியதுடன் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு நான், அண்ணா என்னிடம் இருந்த கிரிக்கெட் கிட முழுவதுமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனக்கு புதிதாக ஒன்று தேவைப்படுகிறது என கூறினேன். அடுத்த ஒரு வாரத்திற்குள் எனக்கு புதிதாக கிரிக்கெட் கிட் ஒன்றை சிவகார்த்திகேயன் அனுப்பி வைத்தார். இந்த சமயத்தில் தான், நான் சேலஞ்சர் டிராபியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. சிவகார்த்திகேயனின் இந்த உதவி அந்த சமயத்தில் எனக்கு ரொம்பவே பேருதவியாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.