‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் ஐஸ்வர்யா ரஜினி. இந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் உலக அளவில் வெற்றி பெற்ற போதும், இந்த படம் படு தோல்வி அடைந்தது. அதேபோல் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 'வை ராஜா வை' என்ற படமும் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவதாக விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த 'லால் சலாம்' படமும் ஐஸ்வர்யா ரஜினிக்கு தோல்வி படமாகவே அமைந்து விட்டது.
இதையடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடி வந்தார் ஐஸ்வர்யா ரஜினி. ஆனால் அவரது கதையை தயாரிப்பதற்கு யாரும் முன் வரவில்லையாம். இதன் காரணமாக ஒரு புதிய பட நிறுவனம் தொடங்கி, தான் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா. புது முகங்கள் நடிக்கும் அந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகிறதாம்.