தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் ஐஸ்வர்யா ரஜினி. இந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் உலக அளவில் வெற்றி பெற்ற போதும், இந்த படம் படு தோல்வி அடைந்தது. அதேபோல் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 'வை ராஜா வை' என்ற படமும் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவதாக விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த 'லால் சலாம்' படமும் ஐஸ்வர்யா ரஜினிக்கு தோல்வி படமாகவே அமைந்து விட்டது.
இதையடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடி வந்தார் ஐஸ்வர்யா ரஜினி. ஆனால் அவரது கதையை தயாரிப்பதற்கு யாரும் முன் வரவில்லையாம். இதன் காரணமாக ஒரு புதிய பட நிறுவனம் தொடங்கி, தான் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா. புது முகங்கள் நடிக்கும் அந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகிறதாம்.