பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடியை வளர்த்துள்ள மகேஷ் பாபு, ஐதராபாத்தில் நடைபெற்ற அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அட்வென்சர் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, நானா படேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று மகேஷ்பாபு தனது மனைவி நம்ரதாவுடன் தங்களது 20வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். மனைவியுடன் சிரித்து மகிழும் ஒரு புகைப்படத்தை இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‛‛என்றென்றும் நான் அவளுடன் இருப்பேன்'' என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதற்கு அவரது மனைவி நம்ரதா, ‛20 அழகான வருடங்களும் எப்பொழுதும் உங்களுடன்' என்று பதிலளித்துள்ளார். மகேஷ் பாபு - நம்ரதா தம்பதிக்கு கௌதம் கட்டமனேனி, சித்தாரா கட்டமனேனி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.