ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடியை வளர்த்துள்ள மகேஷ் பாபு, ஐதராபாத்தில் நடைபெற்ற அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அட்வென்சர் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, நானா படேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று மகேஷ்பாபு தனது மனைவி நம்ரதாவுடன் தங்களது 20வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். மனைவியுடன் சிரித்து மகிழும் ஒரு புகைப்படத்தை இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‛‛என்றென்றும் நான் அவளுடன் இருப்பேன்'' என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதற்கு அவரது மனைவி நம்ரதா, ‛20 அழகான வருடங்களும் எப்பொழுதும் உங்களுடன்' என்று பதிலளித்துள்ளார். மகேஷ் பாபு - நம்ரதா தம்பதிக்கு கௌதம் கட்டமனேனி, சித்தாரா கட்டமனேனி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.