சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்து வெளிவந்த படம் 'மார்கோ'. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்சன் படமாக வெளியாகி உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளனர்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் அதீத வன்முறையான ஆக்சன் படம் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி விளம்பர படுத்தியது கூட அதற்கான ரசிகர்களிடம் சென்றடையும் என்பதால் தான். அதனால் மார்கோ படத்திற்கான ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்து பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் மார்கோ 2 கதையை உருவாக்க வேண்டும். அதற்காக முழு உழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.