‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்து வெளிவந்த படம் 'மார்கோ'. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்சன் படமாக வெளியாகி உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளனர்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் அதீத வன்முறையான ஆக்சன் படம் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி விளம்பர படுத்தியது கூட அதற்கான ரசிகர்களிடம் சென்றடையும் என்பதால் தான். அதனால் மார்கோ படத்திற்கான ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்து பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் மார்கோ 2 கதையை உருவாக்க வேண்டும். அதற்காக முழு உழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.




