'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 2017ல் திருமணம் செய்துகொண்ட பிறகு சில நாட்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் மீண்டும் 2021 முதல் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் விராட பருவம், கஸ்டடி ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி கடந்த 2023ல் மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான நேர் படத்தில் கூட நெகடிவ் சாயல் கொண்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் ஹிந்தியில் ‛ஆர்ட்டிகிள் 70, மைதான்' என பிரியாமணி நடித்த படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‛ஆபிஸர் ஆன் டூட்டி' என்கிற படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் ஒரு அதிரடி போலீஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.