‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 2017ல் திருமணம் செய்துகொண்ட பிறகு சில நாட்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் மீண்டும் 2021 முதல் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் விராட பருவம், கஸ்டடி ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி கடந்த 2023ல் மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான நேர் படத்தில் கூட நெகடிவ் சாயல் கொண்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் ஹிந்தியில் ‛ஆர்ட்டிகிள் 70, மைதான்' என பிரியாமணி நடித்த படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‛ஆபிஸர் ஆன் டூட்டி' என்கிற படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் ஒரு அதிரடி போலீஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.