ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் |
'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை தமன்னா, ஹிந்தியில் 'ஸ்ட்ரீ 2' படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார். தற்போது அசோக் தேஜா இயக்கத்தில் 'ஒடேலா 2' படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், ''நான் கேரவனில் இருந்தபோது, மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். என் கண்கள் குளமாகின. படப்பிடிப்புக்காக மேக்அப் உடன் மஸ்காரா (கண் மை) போட்டிருந்ததால், அந்த சமயத்தில் நான் அழவில்லை. இது ஒரு உணர்வு மட்டுமே, அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக்கொண்டேன்'' என்றார்.
இந்த மோசமான நிகழ்வு எந்த படப்பிடிப்பின்போது என்றோ, என்ன நடந்தது என்றோ தமன்னா குறிப்பிடவில்லை.