எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை தமன்னா, ஹிந்தியில் 'ஸ்ட்ரீ 2' படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார். தற்போது அசோக் தேஜா இயக்கத்தில் 'ஒடேலா 2' படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், ''நான் கேரவனில் இருந்தபோது, மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். என் கண்கள் குளமாகின. படப்பிடிப்புக்காக மேக்அப் உடன் மஸ்காரா (கண் மை) போட்டிருந்ததால், அந்த சமயத்தில் நான் அழவில்லை. இது ஒரு உணர்வு மட்டுமே, அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக்கொண்டேன்'' என்றார்.
இந்த மோசமான நிகழ்வு எந்த படப்பிடிப்பின்போது என்றோ, என்ன நடந்தது என்றோ தமன்னா குறிப்பிடவில்லை.