'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை ஸ்டைலிஷான பாணியில் இயக்கி வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்து மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக பல சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்து வந்தார். அப்போது அவர் தனுஷை வைத்து இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்து கேட்டபோது, கிண்டலாக, “எந்த படத்தைப் பற்றி கேட்டீர்கள்? அதில் ஏதோ ஒரு பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அது என் படம் அல்ல.. யாரோ ஒருவர் செய்தது” என்று நகைச்சுவையாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.. அதாவது அந்த படத்தில் தனுஷின் குறுக்கீடு மிகப்பெரிய அளவு இருந்தது என்பது தான் அவர் சொல்ல வந்தது.
இந்த நிலையில் சமீபத்திய இன்னொரு பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறும்போது, “எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் கூறியது சும்மா ஒரு தமாஷுக்காக. என்னுடைய படங்களிலேயே நான் விரும்பியபடி எடுக்க முடியாமல் போன படம் அது மட்டும் தான். கடைசியாக 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை வெறும் ஐந்திலிருந்து 10 நாட்களில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது எனக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான்.. இதுவே வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்து இந்த கருத்தை நான் சொல்லியிருந்தால் அது தவறாக போயிருக்கும். என்னுடைய படம் என்பதால் ஜஸ்ட் லைக் அதை ஒரு ஜாலிக்காக சொன்னேன்” என்று கூறியுள்ளார்.