‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

சின்னத்திரையில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அதன்பிறகு வேட்டைக்காரன், அங்காடித்தெரு, மரியான், காக்கி சட்டை என பல படங்களில் காமெடியனாக நடித்தவர், இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இணையப் பக்கத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் தான் காரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு மாடு வந்ததால் கார் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்று தெரிவித்திருக்கும் இமான் அண்ணாச்சி, மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.