பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |

சின்னத்திரையில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அதன்பிறகு வேட்டைக்காரன், அங்காடித்தெரு, மரியான், காக்கி சட்டை என பல படங்களில் காமெடியனாக நடித்தவர், இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இணையப் பக்கத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் தான் காரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு மாடு வந்ததால் கார் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்று தெரிவித்திருக்கும் இமான் அண்ணாச்சி, மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.




