என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் பெரும் வெற்றி பெற்று 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார்கள். சென்னையிலும் இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை வைத்து கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த தகவலைத் தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் விஜய் சேதுபதி, வாணி போஜன், சங்கீதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.