‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன்களுக்கு அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஜெயசீலன். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் பாட சொல்லும் காட்சிகளில் தவறாக பாடி விஜய்யிடம் அடி வாங்குவது போன்ற காட்சியில் நடித்திருப்பார். 40 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமானதை அடுத்து படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.