சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன்களுக்கு அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஜெயசீலன். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் பாட சொல்லும் காட்சிகளில் தவறாக பாடி விஜய்யிடம் அடி வாங்குவது போன்ற காட்சியில் நடித்திருப்பார். 40 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமானதை அடுத்து படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.




