கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன்களுக்கு அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஜெயசீலன். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் பாட சொல்லும் காட்சிகளில் தவறாக பாடி விஜய்யிடம் அடி வாங்குவது போன்ற காட்சியில் நடித்திருப்பார். 40 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமானதை அடுத்து படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.