2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன்களுக்கு அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஜெயசீலன். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் பாட சொல்லும் காட்சிகளில் தவறாக பாடி விஜய்யிடம் அடி வாங்குவது போன்ற காட்சியில் நடித்திருப்பார். 40 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமானதை அடுத்து படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.