பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி |

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தை தனுஷின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த எஸ்.ஜே. சூர்யா இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தனுஷ் உடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். ஜாலியாக இருந்தாலும் எமோசனல் மற்றும்தனித்துவமான படமாக இருந்தது. தனுஷுக்கு ஒரு கேள்வி ராயன் படத்திற்கு பிறகு பிஸியாக இருந்தபோதும் எப்படி உடனே ஒரு ஜாலியான படத்தை எடுத்தீர்கள்? படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவில், ‛‛நேரம் ஒதுக்கி எங்கள் படத்தைப் பார்த்ததற்கு நன்றி சார். படம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. உங்கள் விமர்சனத்தால் எங்களது குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.




