‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

2025ம் ஆண்டு ஆரம்பம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிக சுமார் ஆகத்தான் ஆரம்பமாகி உள்ளது. வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ம் தேதி 7 படங்கள் வெளிவந்தன. அடுத்து பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஆக மூன்றே வாரங்களில் 14 படங்கள் வெளிவந்துவிட்டது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24ம் தேதி) “பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்” ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் படங்கள் இன்றும் நாளையும் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது. திங்கள் முதல் அவற்றிற்கான ரசிகர்கள் வருகை குறையலாம். எனவே, ஜனவரி 24ம் தேதி இத்தனை படங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைக்கலாம்.
ஜனவரி 31ம் தேதியன்று 'அகத்தியா' படம் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை வந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதை அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாக உள்ள 'விடாமுயற்சி' படம் தீர்த்து வைக்கலாம்.