மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

2025ம் ஆண்டு ஆரம்பம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிக சுமார் ஆகத்தான் ஆரம்பமாகி உள்ளது. வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ம் தேதி 7 படங்கள் வெளிவந்தன. அடுத்து பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஆக மூன்றே வாரங்களில் 14 படங்கள் வெளிவந்துவிட்டது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24ம் தேதி) “பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்” ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் படங்கள் இன்றும் நாளையும் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது. திங்கள் முதல் அவற்றிற்கான ரசிகர்கள் வருகை குறையலாம். எனவே, ஜனவரி 24ம் தேதி இத்தனை படங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைக்கலாம்.
ஜனவரி 31ம் தேதியன்று 'அகத்தியா' படம் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை வந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதை அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாக உள்ள 'விடாமுயற்சி' படம் தீர்த்து வைக்கலாம்.




