ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவளித்து பாட்டு பாடி மகிழ்வித்த வினித் சீனிவாசன் | 'இருமுடி' படத்தில் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் புதிய தகவல் | விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா | 'பூத் போலீஸ் 2' படத்தை இயக்கும் பிரியதர்ஷன் | சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப் | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் “படகோட்டி” பட அனுபவங்கள் | அட்வான்ஸ் கேட்டு நச்சரிப்பு: பாலிவுட்டுக்கு 'ஜூட்' விட்ட நடிகர் | தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், அதன் பிறகு அப்படியே தெலுங்கு திரையுலகில் நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பிரேமம் என்கிற காதல் படத்தில் நடித்த இவர் தற்போது காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அதாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது, “ஐ லவ் யூ பார் எவர்” என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது. அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை இது போன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பது தான் என்னுடைய சிம்பிளான அறிவுரை” என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
காதல் மீது இவருக்கு என்ன இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.