பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், அதன் பிறகு அப்படியே தெலுங்கு திரையுலகில் நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பிரேமம் என்கிற காதல் படத்தில் நடித்த இவர் தற்போது காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அதாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது, “ஐ லவ் யூ பார் எவர்” என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது. அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை இது போன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பது தான் என்னுடைய சிம்பிளான அறிவுரை” என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
காதல் மீது இவருக்கு என்ன இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.