அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தை தொடர்ந்து தமிழ், அதன் பிறகு அப்படியே தெலுங்கு திரையுலகில் நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார். பிரேமம் என்கிற காதல் படத்தில் நடித்த இவர் தற்போது காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
அதாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இந்த சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போது, “ஐ லவ் யூ பார் எவர்” என்று சொல்வதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பொய். காரணம் எங்கேயும் நடக்காத ஒன்று இது. அது மட்டுமல்ல நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை இது போன்ற டாக்ஸிக் காதலில் சிக்கி இருப்பவர்கள் தயவு செய்து இப்போதே ஓடிவிடுங்கள் என்பது தான் என்னுடைய சிம்பிளான அறிவுரை” என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
காதல் மீது இவருக்கு என்ன இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.