'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' |

எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதி நடத்தி வந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் அதனை படமாக்க விரும்பினார். கோவில்பட்டி அருகில் உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், அதற்காக அந்த மக்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசிய படம் 'தண்ணீர் தண்ணீர்'. சரிதாதான் கதையின் நாயகி. அவருடன் வாத்தியார் ஆர்.கே.ராமன், ஏ.கே.வீராசாமி, ராதாரவி, குகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி வணிகரீதியாவும் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் நடித்த சரிதாவும், 'உமரோ ஜான்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த ரேகாவும் இறுதிச்சுற்று வரை வந்தனர். கடைசியில் நடுவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்தார் சரிதா. வடநாட்டு கலைஞர்கள் அதிகம் அந்த குழுவில் இருந்ததால் மொழி அடிப்படையில் அவர்கள் வாக்களித்தாக அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.