6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
எழுத்தாளர் கோமல் சாமிநாதன் எழுதி நடத்தி வந்த நாடகத்தை பார்த்த கே.பாலச்சந்தர் அதனை படமாக்க விரும்பினார். கோவில்பட்டி அருகில் உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்தும், அதற்காக அந்த மக்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசிய படம் 'தண்ணீர் தண்ணீர்'. சரிதாதான் கதையின் நாயகி. அவருடன் வாத்தியார் ஆர்.கே.ராமன், ஏ.கே.வீராசாமி, ராதாரவி, குகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி வணிகரீதியாவும் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தில் நடித்த சரிதாவும், 'உமரோ ஜான்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த ரேகாவும் இறுதிச்சுற்று வரை வந்தனர். கடைசியில் நடுவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்தார் சரிதா. வடநாட்டு கலைஞர்கள் அதிகம் அந்த குழுவில் இருந்ததால் மொழி அடிப்படையில் அவர்கள் வாக்களித்தாக அப்போது விமர்சனம் செய்யப்பட்டது.