22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பல நட்சத்திர பாட்டாளங்களுடன் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கூலி'. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்குகிறது. இதற்காக ரஜினி சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த படத்தை ஏற்கனவே இந்தாண்டு மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதே தேதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இரு படங்களும் இன்னும் முடியவில்லை. அதனால் ரிலீஸில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.