கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பல நட்சத்திர பாட்டாளங்களுடன் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கூலி'. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்குகிறது. இதற்காக ரஜினி சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த படத்தை ஏற்கனவே இந்தாண்டு மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதே தேதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இரு படங்களும் இன்னும் முடியவில்லை. அதனால் ரிலீஸில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.