எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

90களில் இளைஞர்களின் மனதைக் கிறங்கடித்த கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. முதன்முதலாக ரசிகர்களால் கோவில் கட்டப்படும் அளவிற்கு பிரசித்தி பெற்றவர். தற்போது ஒரு பக்கம் பட தயாரிப்பு, இன்னொரு பக்கம் அரசியல் பயணம் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் குஷ்பு, தான் தயாரிக்கும் படங்களில் ஒரு காட்சி அல்லது ஒரு பாடலுக்காக இடம் பெறுவதும் மேலும் நட்புக்காக அவ்வப்போது ஒரு சில படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
அப்படி வாரிசு படத்தில் அவர் விஜய்யுடன் நடித்திருந்தும் படம் வெளியான போது அவர் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை தந்தது. அதேபோல அண்ணாத்த படத்தில் அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு காமெடி முறைப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஏமாற்றம் அளித்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “அண்ணாத்த படத்தில் நடித்தது இப்போது நினைத்து பார்த்தால் ஏமாற்றம் அளிக்கிறது. நான் அதில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது அதில் ரஜினிக்கு ஜோடியாக நான் தான் நடிக்கிறேன் என்பது போன்று தான் இருந்தது. அப்போது நயன்தாரா கதாபாத்திரம் எல்லாம் இல்லை. போகப்போக நான் நடிக்கும் காட்சிகளை வைத்து பார்த்த போது ரஜினிக்கு அந்த படத்தில் ஜோடியே இல்லை திருமணம் ஆகாமல் இருப்பார் என்பது போன்று தான் கதை நகர்ந்தது. ஆனால் பின்னால் தான் நயன்தாரா கதாபாத்திரம் வலிய கொண்டு வந்து திணிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதேபோல நான் நடித்த காட்சிகள் படப்பிடிப்பின் போது நன்றாக இருந்தன. ஆனால் டப்பிங் பேசும்போது பார்த்தால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது” என்று கூறியுள்ளார்.