பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஒரு சினிமாவை விளம்பரப்படுத்துவதற்காக வேண்டுமென்றே உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு வழக்கு போடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் பத்திரிகைகளில் அந்த படம் பற்றிய செய்திகளை வரவழைத்து அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்வது நடைமுறையில் உள்ளது. இதனை மதுரை உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் சிலர், ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சொர்க்கவாசல்' என்ற சினிமா படம் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரை பின்பற்றுபவர்களை இந்த சினிமா, அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த சினிமாவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று மனு கொடுத்தனர்.
இதற்கு பதலிளித்த நீதிமன்றம் “பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் சினிமாவுக்கு மதுரையில் எப்படி தடை விதிக்க முடியும்? சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, சினிமாவை பிரபலப்படுத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடருவது ஏற்புடையதல்ல. இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது. நீதிமன்றத்தின் இந்த கண்டனம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




