நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர் பாசில் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் பஹத் பாசில். ஆனால் ஆரம்பத்திலிருந்து நல்ல கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு தனி பாதை போட்டு நடித்து வருகிறார்.
கடந்த மூன்று வருடங்களில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படத்திலும் கதாநாயகனாக இல்லாமல் அதே சமயம் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அந்தப் படங்களில் தனது நடிப்பை மற்றும் எல்லோருமே சிலாகித்து பேசும் விதமாக வைத்து விடுகிறார் பஹத் பாசில். அவர் பெரும்பாலும் பேட்டிகளில் பேசும்போது எல்லாம் தன்னை ஒரு ஹீரோவாகவோ நட்சத்திரமாகவோ கூறுவதில்லை. தான் ஒரு நடிகர் என்று மட்டுமே கூறுவார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் குறித்து நடிகை ஊர்வசி பேசும்போது கூட, “தன்னை ஒரு நடிகர் என சொல்லிக் கொள்ளும் தைரியம் நிச்சயமாக பஹத் பாஸிற்கு மட்டும் தான் உண்டு. ஏனென்றால் மற்ற நடிகர்கள் தங்களை ஹீரோக்களாகவும் முன்னணி நட்சத்திரங்கள் ஆகவும் மாற்றிக் கொள்வதற்காகவே போராடுவார்கள். அதற்கான பாதையில் தான் செல்வார்கள். ஆனால் பஹத் பாசிலை பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்து, மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை மட்டும் செய்கிறாரே.. அதனால் தான் அவர் நிச்சயமாக தனித்துவமான நடிகர் என தாராளமாக சொல்ல முடியும்” என்று புகழ்ந்துள்ளார்.